தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதை கொரோனா தொற்றின் இரண்டாவது அலை என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தமிழகத்திலும் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் என அழைக்கப்படும் இர்பான் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

சிறந்த கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான், நடிப்பிலும் அசத்தி வருகிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அஸ்லான் இல்மாஸ் எனும் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார் பதான்.