சென்னை: இந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இணைந்துள்ள 17 புதிய வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரே ஆண்டர்சன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் மோர்னே மோர்கல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தாண்டு ஐபிஎல் ஏலத்திற்காக மொத்தம் 292 வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலம், இம்மாதம் 18ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் ஏலப் பட்டியலில், 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் கூட்டு நாடுகளின் 3 வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 61 ஸ்லாட்டுகள், 8 அணி நிர்வாகங்களால் நிரப்பப்படும். அதில் 22 வெளிநாட்டு வீரர்கள் அடக்கம். மொத்தம் 10 பேர், அதிகபட்ச ஆரம்ப தொகையான ரூ.2 கோடிக்கு பட்டியலிடப்பட்டுள்ளனர்.

அவர்கள், இந்தியாவின் ஹர்பஜன்சிங் மற்றும் கேதார் ஜாதவ், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் மொயின் அலி, சாம் சிப்லிங்ஸ், லியம் பிளங்கட், ஜேஸன் ராய் மற்றும் மார்க் உட், வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் காலின் இங்ராம் ஆகியோர்தான்.