சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

ஏற்கனவே நடந்துமுடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் முன்னிலை வகிக்கிறது. சொந்த மண்ணில் இந்தியாவுக்கு கிடைத்த அவமானத்திற்கு, பழிதீர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது விராத் கோலி தலைமையிலான இந்திய அணி.

இந்திய அணியில், 2 சுழற்பந்து வீச்சாளர்களான ஷபாஸ் நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் அக்ஸார் படேல் அணிக்குள் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி துவங்கவுள்ளது. டாஸ் வெல்வது முக்கியமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.