இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2023 உலகக்கோப்பை ஒருநாள் போட்டி தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டு தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற தொடரிலும் டிசம்பரில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த தொடரிலும் அவர் விளையாடவில்லை.

ஜனவரி தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் அவர் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா முழுமையாக குணமடையாததை அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் 2024 தொடரிலும் இடம்பெறமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

2024 ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்த இந்த தகவல் இந்திய அணி மட்டுமன்றி மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கும் ஏமாற்றமளித்துள்ளது.