லக்னோ:
பிஎல் 2023 தொடரில் பஞ்சாப், குஜராத் அணிகள் வெற்றி பெற்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனால் பஞ்சாப் அணி மும்பை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

லக்னோ – குஜராத் அணில் இடையே லக்னோவில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

ஐபிஎல்-லில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பெங்களூரூ – ராஜஸ்தான் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் கொல்கத்தா – சென்னை அணிகளும் மோத உள்ளன.