சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.

2022 ஜூன் மாதம் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது காயமடைந்த கைல் ஜேமிசன் சிகிச்சைக்குப் பிறகு தற்போது இந்திலாந்துடன் நடைபெறும் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.

ஷனகா

முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய கைல் ஜேமிசன் தொடர்ந்து விளையாட முடியாமல் ஆட்டத்தில் இருந்து விலகினார் இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதால் ஐபிஎல் தொடரிலும் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி 20 அணியின் கேப்டனாக உள்ள ஆல்-ரவுண்டர் ஷனகா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.