மும்பை:
பிஎல் 2022 தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியும், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றன.

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. 155 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு- மும்பை அணிகள் இடையே நடந்த மற்றொரு போட்டியில், பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ராஜஸ்தான், லக்னோ அணிகளும் மோத உள்ளன.