ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும, தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (என்ஐடி) படிக்கும் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. ஒருசில மாநிலங்களில் மட்டும் குறைந்த அளவிலான தொற்று பாதிப்பே கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம்  ஸ்ரீநகரில் உள்ள என்.ஐ.டி.யில் படிக்கும் 24 மாணவர்கள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு நடத்தப்பட்ட கொரோனா  பரிசோதனையில் 24 பேருக்கு பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கும் நடைமுறைகள் தொடங்கி உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

பிஎம்ஓ ஹஸ்ரத்பால், இன்ஸ்டிட்யூட்டில் இன்று 47 மாணவர்களின் RAT சோதனையின் போது 24 மாணவர்களுக்கு COVID நேர்மறை சோதனை உறுதி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், காஷ்மீரில் ஒரே கல்வி மையத்தில் படிக்கும் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.