டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 நாட்களாக சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத் தின் சிபிஐ காவல் மேலும் 1நாள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை, 2 முறை காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வருகிறது. அவரது சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். 

அப்போது நடைபெற்ற வாதங்களின்போது, சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க மேலும் 1நாள் அனுமதி தர வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சிதம்பரத்திற்கு மேலும் ஒரு நாள் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், இடைக்கால ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதும் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.