சென்னை:
46 வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி வருகிற ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

புத்தக கண்காட்சிக்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 800 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இதில் திருநங்கைகளுக்காக ஒரு அரங்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் வைரவன் தெரிவித்துள்ளார்.

இந்த கண்காட்சி தொடர்பாக தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், 46 வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. 46 வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.