சென்னை: தமிழக நிதிஅமைச்சரும், துணைமுதல்வருமான ஓபிஎஸ் தாக்கல் செய்து வரும் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கா கரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. மேலும், பல்வேறு திட்டங்களுக்கு துறைவாரியாக ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

பட்ஜெட் தாக்கலின் தமிழகஅரசின் சாதனைகளை பட்டியலிட்ட ஓபிஎஸ்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சிறப்பான நிர்வாகி என்று புகழ்ந்தார். மேலும்,   கொரோனாவை எதிர்கொண்ட மாநிலங்களில் தமிழகம் அனைவருக்கும் முன்னோடியாக இருப்பதாகவும், கொரோனாவுக்கு ஆளானவர்களில் 2 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது என்று கூறினார்.

கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில் ரூ.13,352 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது.  அம்மா மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.19,420.54 கோடி ஒதுக்கீடு

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை, இயற்கையாக உயிரிழந்தால் ரூ.2லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு  ரூ.5000 கோடி ஒதுக்கீடு. இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000 ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும்.

வேளாண்துறைக்கு 11,982 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும்  கூறினர்.

காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.  வரும் நிதி ஆண்டிற்கு ரூ.9567.93 கோடி ஒதுக்கீடு.

தீயணைப்புத்துறைக்கு ரூ.436.68 கோடி ஒதுக்கீடு

நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1437.82 கோடி ஒதுக்கீடு

மீன்வளத்துறைக்கு  ரூ.580.97 கோடி ஒதுக்கீடு</p>

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத்திட்டப்பணிகள் 2022 மார்ச் மாதம் முடிக்கப்படும். தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.6941 கோடிக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3016 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் நிதியாக ரூ.3548 கோடி ஒதுக்கீடு.  பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் (நகர்புறம்) ரூ.3700 கோடி ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.22,218 கோடி ஒதுக்கீடு

சென்னையில் போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.3140 கோடியில் திட்டம்

மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.18,750 கோடி ஒதுக்கீடு

அடுத்த சில ஆண்டுகளில் 2000 மின்சாரப் பேருந்துகள் உட்பட, 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

ரூ.6683 கோடி மதிப்பீட்டில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை அமைக்க விரிவான சாத்தியக் கூறு அறிக்கை-ஆய்வு

6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்

2019 உலக முதலீட்டாளர் மாநாட்டில் இருந்து இன்று வரை கையெழுத்திடப்பட்டவற்றில் 89% திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 81 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன, 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தை வலுப்படுத்த கூடுதல் மூலதனமாக ரூ.1000 கோடியை அரசு வழங்கும் – ரூ.300 கோடி ஒதுக்கீடு.

மதிய சத்துணவுத் திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1953.98 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர் சிறப்புக் கூறுகள் திட்டத்திற்காக ரூ.13,967.58 கோடி ஒதுக்கீடு

பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1276.24 கோடி ஒதுக்கீடு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்காக ரூ.229.37 கோடி ஒதுக்கீடு

மின்கட்டண மானியங்களுக்காக ரூ.8834.68 கோடி ஒதுக்கீடு

உதய் திட்டத்தின் கீழ், கடன்களை மானியமாக மாற்றுவதற்கான இறுதிக்கட்ட மானியமாக ரூ.4563 கோடி ஒதுக்கீடு மற்றும் உதய் திட்டத்தின் வழிமுறைகளின்படி, இழப்புகளை ஈடுசெய்யும் விதமாக ரூ.7217.40 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு

கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1224.26 கோடி ஒதுக்கீடு

உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1932.19 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் 19,855 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்படும்

மாற்றுத் திறனாளிகளுக்காக கண்டறியப்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.

இவ்வாறு துறை ரீதியாக வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.