சென்னை:
மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவரும் 11490 தொழுநோயாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டால் ஆபத்து என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி குறித்து மக்களிடம் மத்திய-மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.


ஆனாலும் மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படவில்லை. இதையடுத்து கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய, மாநில அரசுகளும் மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவரும் 11490 தொழுநோயாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டது.