சென்னை,
முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளை யொட்டி நாடு முழுவதும் அவரது படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
டெல்லியில் அவரது நினைவிடத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மறைந்த பிரதமர் இந்திரா காந்தி படத்திற்கு காங்கிசார் மரியாதை செலுத்தினர்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இந்திராகாந்தியின் திருவுருவ படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னை இந்திராகாந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.