டில்லி

ஷ்யா மற்றும் இந்தியா இடையே உள்ள நட்பு நிலையானது எனப் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்.

டில்லியில் தற்போது இந்தியா – ரஷியா இடையேயான 21-வது உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளனர்.  ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பிரதமர் மோடி தனது உரையில் ”கொரோனாவால் பல்வேறு சவால்களைச் சந்தித்தபோது இந்தியா – ரஷியா இடையேயான நட்பு வளர்ந்து கொண்டு செல்கிறது. நமது சிறப்பு வாய்ந்த மற்றும் யுக்தி நிறைந்த கூட்டணி தொடர்ந்து வலிமையடைந்து வருகிறது.

உலகம் கடந்த சில தசாப்தங்களில் உலகம் பல்வேறு அடிப்படை மாற்றங்களைக் கண்டுள்ளது.  பல அரசியல் கூட்டணிகள் உருவெடுத்து வருகின்றன. ஆயினும் இந்தியா – ரஷியா இடையேயான நட்பு தொடர்ந்து நிலையாக உள்ளது. இந்த இந்தியா – ரஷியா இடையேயான உறவு தனித்துவமான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட நட்பாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.