சிட்னி:

ர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) சார்பில், ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சிட்னியில நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட,  தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வலரிவன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில், இந்தியா சார்பாக கலந்துகொண்ட தமிழக வீராங்கனையான  இளவேனில் வலரிவன் தங்கம் வென்றார். மேலும், தகுதிச்சுற்றின்போது 631.4 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையும் படைத்துள்ளார்.

2-வது முறையாக ஜூனியர்  உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள இளவேனில், இறுதிச்சுற்றில் 249.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.

மேலும், அணிகளுக்கான பிரிவில் ஷ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோருடன் இணைந்து 2-வது தங்கத்தையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, ஆடவருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா வெண்கலப் பதக்கம் வென்றார். அதே பிரிவில் இதர இந்தியர்களான சூர்ய பிரதாப் சிங் 6-வது இடத்திலும், சாஹு துஷார் மனே 8-வது இடத்திலும் நிறைவு செய்தனர்