சென்னை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் இந்திய பொருளாதாரம் மேம்படும் என சென்னையில் உள்ள கடல் சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றிய  குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது.  இதில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று மொலை சென்னை  வந்தார்.   மாலை 6 மணிக்கு விமானப்படை விமானத்தில் புறப்பட்ட அவர், 6.50 மணிக்கு சென்னை வந்தடைந்தார்.  சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் வரவேற்றனர். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவரை வரவேற்றனர். இதையடுத்து ஆளுநர் மாளிகையில் ஓய்வுஎடுத்தவர்,. இன்று காலை  சென்னை  கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா வில் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன்  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், இணை அமைச்சர்கள் ஸ்ரீபாத் நாயக், சாந்தனு தாக்கூர், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில்  பேசிய குடியரசு தலைவர், திரெளபதி முர்மு, “சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் இருந்தே தென்னிந்தியாவின் கடல் வழி வணிகம் நடைபெற்று வந்துள்ளது. 7,500 கி.மீ கடல் எல்லை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. கடல் வழி பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கடல் வழி வணிகத்தில் உலகளவில் இந்தியா இரண்டாவது சிறப்பான நாடாக இருக்கிறது. நம் நாடு கடல் வழி வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய   ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு சோழ, சேர, பாண்டிய சாம்ராஜ்யத்தில் வணிகம் மட்டும் அல்ல, கலாச்சார பண்பாடும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாகர்மாலா திட்டத்தின் மூலம் நீர் வழிப் போக்குவரத்து, வணிகம், பொருளாதாரம் மேம்படும். சாகர்மாலா திட்டம் கடல் வழி வணிகத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். படித்து பட்டம் பெறுவது மிகவும் பெருமை வாய்ந்தது. அதோடு சமூக பெறுப்பும், கடல் சார் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தவும் வேண்டும்” என்றார்.சென்னை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் பொருளாதாரம் மேம்படும் என சென்னையில் உள்ள கடல் சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றிய  குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது.  இதில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று மொலை சென்னை  வந்தார்.   மாலை 6 மணிக்கு விமானப்படை விமானத்தில் புறப்பட்ட அவர், 6.50 மணிக்கு சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் வரவேற்றனர். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

இதையடுத்து ஆளுநர் மாளிகையில் ஓய்வுஎடுத்தவர்,. இன்று காலை  சென்னை  கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா வில் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன்  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், இணை அமைச்சர்கள் ஸ்ரீபாத் நாயக், சாந்தனு தாக்கூர், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில்  பேசிய குடியரசு தலைவர், திரெளபதி முர்மு, “சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் இருந்தே தென்னிந்தியாவின் கடல் வழி வணிகம் நடைபெற்று வந்துள்ளது. 7,500 கி.மீ கடல் எல்லை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. கடல் வழி பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கடல் வழி வணிகத்தில் உலகளவில் இந்தியா இரண்டாவது சிறப்பான நாடாக இருக்கிறது. நம் நாடு கடல் வழி வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய   ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு சோழ, சேர, பாண்டிய சாம்ராஜ்யத்தில் வணிகம் மட்டும் அல்ல, கலாச்சார பண்பாடும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாகர்மாலா திட்டத்தின் மூலம் நீர் வழிப் போக்குவரத்து, வணிகம், பொருளாதாரம் மேம்படும். சாகர்மாலா திட்டம் கடல் வழி வணிகத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். படித்து பட்டம் பெறுவது மிகவும் பெருமை வாய்ந்தது. அதோடு சமூக பெறுப்பும், கடல் சார் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தவும் வேண்டும்” என்றார்.