சிங்கப்பூர்

ந்தியப் பெண் எழுத்தாளர் மீரா சந்த் சிங்கப்பூரின் உயரிய விருதைப் பெற்றுள்ளார்

ஆண்டுதோறும் சிங்கப்பூரில் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்தச் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது வழங்கப்படும். இந்த 2023 ஆம் ஆண்டுக்கான விருதைப் புகழ்பெற்ற இந்தியப் பெண் எழுத்தாளரான மீரா சந்த் பெற்றுள்ளார்.

சுமார் 81 வயதாகும் மீரா சந்த் பல்வேறு கலாச்சார சமூகங்கள் குறித்த புத்தகங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர் ஆவார்.  இந்த உயரிய விருதை மீரா சந்த் உடன் நாவலாசிரியர் சுசென் கிறிஸ்டின் லிம் மற்றும் மலேசியா நாட்டிய கலைஞர் ஒஸ்மான் அப்துல் ஹமீது ஆகியோரும் பெற்றுள்ளனர்.

இதையொட்டி சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில்  மீரா சந்த் உள்பட 3 பேருக்கும் அதிபர் தர்மன் சண்முக ரத்தினம் விருது வழங்கி கவுரவித்தார்.