கான்பெரா: முத்தரப்பு பெண்கள் டி-20 தொடரில், இந்திய அணி, ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பெண்கள் கிரிக்கெட் அணிகள் கலந்துகொள்ளும் முத்தரப்பு டி-20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இதில், முதலில் நடந்தப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய பெண்கள் அணி எளிதான வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில், தற்போது தனது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி. தற்போதைய நிலையில் இந்திய அணி நல்ல ஃபார்மில் இருந்துவருகிறது.

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நன்றாக ஆடிவருகிறார். எனவே, இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி வெற்றியைப் பதிவுசெய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.