வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிராக நடந்த நான்காவது டி-20 போட்டியில், தாமதமாக பந்துவீசிய காரணத்தால், இந்திய அணிக்கு சம்பளத் தொகையிலிருந்து 40% அபராதமாக விதிக்கப்பட்டது.

நியூசிலாந்துக்கு எதிராக நடந்த நான்காவது டி-20 போட்டியில், இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் வ‍வென்றிருந்தாலும், பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், வீசியிருக்க வேண்டிய ஓவர்களைவிட, 2 ஓவர்கள் குறைவாகவே வீசியது. எனவே, 1 ஓவருக்கு 20% வீதம், 2 ஓவர்களுக்கு 40% என்ற அளவில், ஒவ்வொரு வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராதத்தை இந்தியக் கேப்டன் விராத் கோலி ஒப்புக்கொண்டதால், இதுதொடர்பாக மேற்கண்ட விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.