பே ஓவல்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி-20 போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

இம்மைதானத்தில் இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இதுவாகும். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில், 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்று, ஏற்கனவே கோப்பையையும் வென்றுவிட்டது.

கடைசி இரண்டு போட்டிகளில், வெற்றியை கிட்டத்தட்ட தொட்டும்கூட நியூலாந்து போட்டியை இந்தியாவிடம் இழந்துவிட்டது. இரண்டு போட்டிகளிலுமே சூப்பர் ஓவர் முறையில் இந்திய அணி வெற்றிபெற்றது. எனவே, மனோரீதியாக நியூசிலாந்து அணி சோர்ந்துள்ளது என்பது உண்மையே.

இன்றையப் போட்டியில், இந்திய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்துபவர் ரோகித் ஷர்மா. ஆம், கோலிக்கு இன்றையப் போட்டியில் ஓய்வு தரப்பட்டுள்ளது. மேலும், பும்ராவுக்கும் ஓய்வு தரப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், முகமது ஷமி அணிக்கு மீண்டும் திரும்புகிறார். நியூசிலாந்து தரப்பில் கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்புவாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.