சிங்கப்பூர்

பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த இந்தியருக்குச் சிங்கப்பூரில் 18  ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை அனுபவித்து மறுபடியும் அதே குற்றம் புரிபவர்களுக்கு சிங்கப்பூரில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.  இந்தியாவை சேர்ந்த மார்க் கலைவாணன் என்பவர் பாலியல் பலாத்கார வழக்கில் 16 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்துக் கடந்த 2017-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்து விடுதலையான சிறிது நேரத்திலேயே அவர் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணிப்பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. எனவே கலைவாணனுக்கு 18 ஆண்டுகள் தடுப்பு காவல் சிறைத் தண்டனையும், 12 பிரம்படி வழங்கவும் உத்தரவிட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.