டில்லி

மாநிலங்களவையிலிருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கிய முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமெனத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்ததையடுத்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்  மல்லிகார்ஜூன் கார்கே,

“மணிப்பூர் குறித்து விரிவான விவாதம் நடக்கும் போது சில விவரங்கள் வெளிவரும் என்று நம்புகிறோம். பிரதமர் அவைக்கு வர தயாராக இல்லை. அரசும் எங்கள் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் ”

என்று தெரிவித்துள்ளார்.