சிட்னி: மூன்றாவது டி-20 போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியைப் போலவே, முதலில் பந்துவீச முடிசெய்துள்ளது.

இதன்படி, ஆஸ்திரேலிய அணியில், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் கேப்டன் பின்ச் களமிறங்கியுள்ளனர். மேத்யூ வேட் இம்முறையும் அதரடியாகவே தனது ஆட்டத்தை துவக்கியுள்ளார். கடந்தமுறை போட்டியில் இடம்பெறாத ஆரோன் பின்ச் இந்தமுறை களமிறங்கியுள்ளார்.

துவக்க வீரராக முந்தைய 2 போட்டிகளில் களமிறங்கிய ஆர்கி ஷார்ட், இம்முறை மூன்றாவது விக்கெட்டாக களமிறங்குகிறார். மற்றபடி, ஆஸ்திரேலிய அணியில் வேறெந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்திய அணியைப் பொறுத்தவரை, கடந்தப் போட்டியில் களமிறங்கிய அணியே, அப்படியே மீண்டும் களமிறங்கியுள்ளது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி வென்றால், டி-20 தொடரில் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யலாம்.

இன்றையப் போட்டியில், அதிரடியாக ஆடக்கூடிய கேப்டன் ஆரோன் பின்ச், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டக்அவுட் ஆகியுள்ளார்.