சிட்னி: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி, சிட்னியில் இன்று பிற்பகல் 1.40 மணிக்குத் துவங்குகிறது.

இன்றையப் போட்டியிலும் இந்திய அணி வென்றால், டி-20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை, அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்யலாம். இந்தாண்டின் துவக்கத்தில், நியூசிலாந்து சென்ற இந்திய அணி, சொந்த மண்ணில் அந்த அணியை, இதே நியூசிலாந்து மண்ணில் ஒயிட்வாஷ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி, 5 பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டே சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இரண்டாவது டி-20 போட்டியில், ஆல்ரவுண்டர் ஜடேஜா இல்லாமலேயே இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு டி-20 போட்டிகளில் ஓரம் கட்டப்பட்ட பும்ராவும், சரியாக செயல்படாத முகமது ஷமியும் இன்றையப் போட்டியில் பங்கேற்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.