மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான  வீரர் ரிஷப் பந்த் விபத்தில் பலத்த காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரிஷப் பந்த் சென்ற கார்  இன்று அதிகாலையில், டெல்லி- டேராடூன் நெடுஞ்சாலையில் டிவைடரில் மோதி விபத்தில் சிக்கியது.  இதில் கார் பலத்த சேதம் அடைந்ததுடன், அதில் இருந்த ரிஷப் பந்த்திற்கு தலை ,  முதுகு மற்றும் காலில் பலத்த  காயம் ஏற்பட்டுள்ளருது. அவருக்கு  தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆரம்பப் படங்களில், பந்த் பயணித்த கார் முற்றிலும் எரிந்திருப்பதைக் காணலாம்; மற்றொரு படத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் முதுகில் பலத்த காயங்களுடன் தலையில் கட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறார்.

அவர் விரைந்து குணமடைய வேண்டும் என விளையாட்டு வீரர்கள் உள்பட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.