கொழும்பு

ந்திய நிறுவனத்துக்கு இலங்கையில் 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட அந்நாட்டு அரௌ திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் மானிய உதவியுடன் இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இப்புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஹைபிரிட் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை U Solar Clean Energy Solutions (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை செய்தி தொடர்பாளரும், ஊடகத்துறை மந்திரியுமான பந்துல குணவர்தனே தெரிவித்தார்.