மும்பை:
சிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்க உள்ளது. உலக கோப்பைக்கு தேவையான இறுதிக்கட்ட அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்துவிட்டன.

இந்த ஆசிய கோப்பை தொடரானது பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டில் நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு கலந்து கொள்ளும் இந்திய அணியின் விளையாட்டு வீரர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மான் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா