சென்னை:
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 3வது அணியை இந்தியா அறிவித்தது.


இந்தியா சார்பில் மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் தமிழக வீரர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரு அணிகளில் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்தியா சி அணியில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னேற்பாடுகளை தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் 18 துறை செயலாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.