டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,330 பேர் உயிரிந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை  இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,

  • நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 4,984 ஆயிரம் குறைவாக உள்ளது.  இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 2,97,00,313 பேர் .
  •  கடந்த 24 மணி நேரத்தில்  2,330 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு  இதுவரை  3,81,9031 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து  1,03,570 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,84,91,670 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,26,740 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டில் இதுவரை 26,55,19,251 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.