டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 -பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,  நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் 35,499-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா  மொத்த பாதிப்பு விகிதம் 2.35 சதவீதமாகவும்  தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.59 சதவீதமாகவும் கொரோனா  மீட்பு விகிதம்  97.40 சதவீதமாக ஆக உள்ளது.  மொத்த பாதிப்பு 3,19,70,035 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 447-பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,27,371 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 39,686 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,11,39,457 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம் 97.40% ஆக உள்ளது

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 4,02,188 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 50,86,64,759 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது; நேற்று மட்டும் 16,11,590 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது” என கூறப்பட்டு உள்ளது.