சென்னை: தமிழ்நாட்டில் நேற்று புதியதாக மேலும் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  சென்னையில், 187 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதிலும், குறிப்பாக கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை  25,75,308 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  34,317 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 25,30,584  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,407 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,39,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே நேற்று உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 8,338 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 157 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,29,348 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,981 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

08.08.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 33,43,226 பேருக்கும், 08.08.2021 அன்று 15,745 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: