டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேருக்கு புதிய  பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 4,209 பேர் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2  கோடியே 60 லட்சத்து 31 ஆயிரத்து 991-ஆக உள்ளது

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்து 27 ஆயிரத்து 295- ஆக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 57 ஆயிரத்து 295-பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை  கோடியே 27 லட்சத்து 12 ஆயிரத்து 735-பேர் குணம் அடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 4,209- பேர்  உயிரிழந்துள்ளனர். இதுவரை 2 லட்சத்து 91 ஆயிரத்து 331- பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்து  27 ஆயிரத்து 295- ஆக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை  19,18,79,503 கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 32,44,17,870 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில், 20,61,683 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.