சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,  பொதுமுடக்கத்தை ஜூன் 7ந்தேதி வரை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு முடக்கம் வரும் 24ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் முழுமுடக்கத்தை நீட்டிக்கலாமா அல்லது தொடர்ந்து அமல்படுத்தலாமா என்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் குழுவின் கூட்டம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவுடனும் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்,.

 

இதைத்தொடர்ந்து, பொதுமுடக்கம் மேலும் 15நாட்கள் நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஜூன் 7ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.