டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் இன்று 2451 புதிய கோவிட் 19 வழக்குகள் பதிவாகியுள்ளன; 14241 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை 8 மணி அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி,

நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 451 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றுயை பாதிப்பை விட அதிகமாகும்.  இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 52 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 22 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,589 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 16 ஆயிரத்து 068 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 241 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 18,03,558 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை  தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,87,26,26,515 ஆக உள்ளது.