புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெல்வதற்கு, இந்தியா குறைந்தது இன்னும் 2 விக்கெட்டுகளையாவது உடனடியாக வீழ்த்தியாக வேண்டிய நிலையில் உள்ளது.

தற்போதைய நிலையில், 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இங்கிலாந்து 35.3 ஓவர்களில் 226 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு, 87 பந்துகளில் 92 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.

பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகுர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இருவருமே வேகப்பந்து வீச்சாளர்கள். இங்கிலாந்தின் கைவசம் பந்துகள் கணிசமாக உள்ளன. எனவே, இந்தியாவின் வெற்றிக்கு தேவை விக்கெட்டுகளே!

இன்றைய சூழலில், சுழற்பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. கருணால் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவின் பந்துகள் பறக்கவிடப்படுகின்றன. இன்னும் சில ஓவர்களுக்குள் இங்கிலாந்து வசமிருந்து குறைந்தது 2 விக்கெட்டுகளாவது எடுக்கப்படாத பட்சத்தில், இந்தியாவின் நிலை சிக்கலாகும்.

தற்போது 25 ரன்களுக்கு மேலாக எடுத்து ஆடிவரும் மொயின் அலியை ரன்அவுட்டாக்க கிடைத்த அழகான வாய்ப்பை இந்தியா தவறவிட்டது.