புனே: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், துவக்கத்தில் சிறப்பாக ஆடிவந்த இங்கிலாந்து அணி, தற்போது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

துவக்க வீரர்களான ஜேஸன் ராயும், பேர்ஸ்டோவும் மிரட்டினர். ராய் முதலில் அவுட்டான நிலையில், சதத்தை நெருங்கிய பேர்ஸ்டோ, ஷர்துல் பந்தில் 94 ரன்களில் அவுட்டானார்.

பென் ஸ்டோக்ஸ் வந்த வேகத்தில் 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் கேப்டன் இயன் மார்கன் சற்று தாக்குப்பிடிக்க முயன்றார். ஆனால், 22 ரன்களில் அவரும் அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பிறகு பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 2 ரன்களில் ஷர்துல் பந்தில் காலியானார்.

தற்போது, 25 ஓவர்களில் 176 ரன்களை எடுத்துள்ள இங்கிலாந்து 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போது சாம் பில்லிங் & மொயின் அலி களத்தில் உள்ளனர்.

தற்போது, இங்கிலாந்து அணியின் வெற்றி பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.