புனே: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 318 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் இங்கிலாந்து, 15 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 135 ரன்களைக் குவித்துவிட்டது.

அந்த அணியின் பேர்ஸ்டோ, பேயாட்டம் ஆடி வருகிறார். 52 பந்துகளை சந்தித்துள்ள அவர், 7 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 80 ரன்களைக் குவித்துள்ளார். ஜேஸன் ராய் 35 பந்துகளில் 46 ரன்களை சேர்த்துள்ளார்.

ராய் 46 ரன்களில் வெளியேறினார் ராய். இதனையடுத்து தற்போது ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் களமிறங்கியுள்ளார்.

இந்தியப் பந்துவீச்சாளர்களில் புதிதாக அணியில் இடம்பெற்ற பிரசித் கிருஷ்ணா ரன்களை வாரி வழங்கியுள்ளார். புவனேஷ்வர் குமார் மட்டுமே இதுவரையான நிலவரப்படி நன்றாக வீசியுள்ளார்.

இந்திய அணி, இங்கிலாந்தின் சிலபல விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றவில்லை என்றால், பெரிய தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும்.