டெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா (கோவிட்-19) துணை மாறுபாட்டான ஜேஎன்.1 (JN.1)இன் பாதிப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 614 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 3 மாநிலங்களில் 20 பேர் ஜேஎன்.1 தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை 28 ஆக இருந்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தற்போது 78 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது புதிய கொரோனா (கோவிட்-19) துணை மாறுபாட்டான ஜேஎன்.1 (JN.1)இன் பாதிப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றன. இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) தரவுகளின்படி, நாடு முழுவதும் கொரோனா துணை வகை ஜேஎன்.1 தொற்றால் 20 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இவர்களில் 18 பேர் கோவாவிலும், தலா ஒருவர் கேரளா மற்றும் மகாராஷ்டிராவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனத்தால் BA.2.86 துணைப்பிரிவுகளின் ஒரு பகுதியாக முன்னர் ஆர்வத்தின் மாறுபாடு (VOI) என வகைப்படுத்தப்பட்ட ஜேஎன்.1 அதன் பரவல் காரணமாக செவ்வாயன்று ஒரு தனி “விருப்பத்தின் மாறுபாடு” வகைப்படுத்தப்பட்டது. இருப்பினும், உலகளாவிய பொது சுகாதார அபாய அளவில் இது இன்னும் “குறைவாக” பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் உறுதியளித்தது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 614 பேர் தொற்றுக்கு பதிக்கப்பட்டுள்ளனர். இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் இப்போது 2,311 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கேரளாவில் மூன்று புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும், இன்றுவரை ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 5.33 லட்சமாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.50 கோடியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 292 பேர் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் தொற்றுப் பரவல் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு (13 பேர்), மகாராஷ்டிரா (11 பேர்), கர்நாடகா (9 பேர்), தெலுங்கானா மற்றும் புதுச்சேரி (4 பேர்), டெல்லி மற்றும் குஜராத் (3 பேர்), மற்றும் கோவா மற்றும் பஞ்சாப் (1 பேர்) என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் கூறுகிறது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களுடன் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அதில் அவர் வைரஸின் வளர்ந்து வரும் விகாரங்களை மதிப்பாய்வு செய்வது குறித்து வலியுறுத்தினார். கூட்டத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர்  தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்  “இன்று, சுவாச நோய்கள் (COVID-19 உட்பட) மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான தயார்நிலை குறித்து நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அனைத்து மாநிலங்களும் சுகாதார வசதிகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கான நேர்மறையான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தின. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், ஆனால் பீதி அடையத் தேவையில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

INSACOG நெட்வொர்க் மூலம் மாறுபாடுகளைக் கண்காணிக்கவும், புதிய மாறுபாடுகளை சரியான நேரத்தில் கண்டறிவதை உறுதி செய்யவும் நேர்மறை வழக்கு மாதிரிகளின் முழு மரபணு வரிசைமுறைக்கான கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 கேரளவில் இன்று நிலவரப்படி 2,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் கொரோனாவால் மரணடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த 2 நாட்களில் கொரோனாவால் ஒருவர் மரணமடைந்துள்ளார். கர்நாடகா சுகாதாரத்துறை தகவலின்படி இன்று காலை 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 35 ஆக இருந்த எண்ணிக்கை ஒரே நாளில் அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை 6 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் இன்று 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 35 பேரும், கோவாவில் 23 பேரும், புதுச்சேரி 20, குஜராத்தில் 12 பேரும், டெல்லியில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 48 மணி நேரத்தில் கேரளா மற்றும் கர்நாடகாவில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா சுகாதாரத்துறை, முதியவர்கள், பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.