புனே: இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பன்ட் & பாண்ட்யா இணைந்து அதிரடியாக ஆடிவரும் நிலையில், இந்திய அணி 30 ஓவர்களில் 206 ரன்களை எடுத்துள்ளது.

மொத்தம் 41 பந்துகளை சந்தித்துள்ள பன்ட், 2 சிக்ஸர் & 3 பவுண்டரிகளுடன் 46 ரன்களை எடுத்து ஆடிவருகிறார். ஹர்திக், 18 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸர்கள் & 2 பவுண்டரிகளுடன் 34 ரன்களை எடுத்துள்ளார்.

இந்த இருவரும் இணைந்து பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும். இவர்கள் இருவரும் 40வது ஓவர் வரை நிலைத்தால், இந்திய அணியின் ரன் எண்ணிக்கை 350 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.