புதுடெல்லி:
ந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் கடந்த 24மணி நேரத்தில் 42 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவால் மேலும் 18,257 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், 42 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து மேலும் 14,553 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், கொரோனாவுக்கு 1.28 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.