சென்னை:
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ தக்காளியின் விலை 20 ரூபாய் வரை குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்திருப்பதால் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை 20 ரூபாய் வரை குறைந்துள்ளது.

நேற்று மொத்த விற்பனை சந்தையில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளியின் விலை தற்போது 40 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.