டெல்லி: 2021-22 நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய 31ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு வருமான வரி பைல் செய்பவர்கள் குறைந்தபட்சம் ரூ.1000 அபராதம் செலுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்.  அதன்படி, 2021-2022-ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த  ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஜூன் வரை வருமான வரி தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டத. அதன்படி, அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், வரி செலுத்தாதோல் வரும் 31ந்தேதிக்குள் ஐடி ரிட்டன் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும்,  அதற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சதத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருகிற டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்துடன், ஜனவரி, முதல் மார்ச் வரை, ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், மார்ச் மாதத்திற்கு பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

எனவே, அ கணக்கு தாக்கல் செய்யாதோர், விரைவில் தாக்கல்செய்ய வேண்டும். இதுதொடர்பாக வரி செலுத்துவோருக்கு குறுந்தகவல் மற்றும் இ-மெயில் வாயிலாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.