சென்னை.

டசென்னையின் மிக பிரபலமான துணிக்கடையான வீராஸ் துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

வண்ணாரப்பேட்டை எம்.சி சாலையில் உள்ளது பிரமாண்டமான வீராஸ் துணிக்கடை. இந்த கடைமீது வருமான வரி சரியா செலுத்தவில்லை என்ற புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இன்று காலை முதல் வீராஸ் துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர்கள் மணிகண்டன், தீபக் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும், இந்த சோதனையில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பொங்கல் சீசன் என்பதால் வீராஸ் துணிக்கடையில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதால், அங்கு துணி எடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். மேலும், துணிக்கடைக்கு வேலைக்கு வந்த ஊழியர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கபடவில்லை.