ராணிப்பேட்டை: திமுகவை சேர்ந்த தொழிலதிபரின்  வீடு, அலுவலகம் உள்பட 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்குவாரி நடத்தி வருபவர் தொழிலதிபர் ஏவி சாரதி. இவர் திமுகவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவரது வீடு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ளது. இன்று காலை அங்கு வந்த வருமான வரித்துறையினர் அவரது வீடு, அலுவலகம் மற்றும் அருகே உள்ள உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏவி சாரதியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சென்னை, வேலூர், ஆற்காடு உள்ளிட்ட 28 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.

ஏ.வி.சாரதி முன்னதாக, அதிமுகவில் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்தவர். கடந்த ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.