சென்னை:

மிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.  மேற்கு உள் தமிழக மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்க ளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை அல்லது சூறாவளி காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் 5 செ.மீ மழையும்,திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 4செ.மீ மழையும், தேனி சுற்று வட்டார பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும்,

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகப்படியாக 37டிகிரி செல்சியஸ் முதல்குறைந்த பட்சமாக 29டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.