சிங்கப்பூர்

மீண்டும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இந்த பரவலால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.

தீவிர கட்டுப்பாடுகளாலும் தடுப்பு ஊசியாலும் பல நாடுகளில் இயல்பு நிலை திரும்பியது இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 10 ஆயிரம் அதிகம் ஆகும்.

பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கடைப்பிடிக்கும்படி அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.