ரோம்

இத்தாலி நாட்டின் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே டிவொலி பகுதியில் மருத்துவமனை உள்ளது. நேற்று இரவு இந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மருத்துவமனையின் மேல் தளத்தில் வேகமாகப் பரவியது.

உடனடியாக இந்த தீ விபத்து குறித்துத் தீயணைப்பு, மீட்புக்குழுவினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.  விபத்து குறித்த தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மருத்துவமனையில் சிக்கித்தவித்த நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர்.

ஆயினும் இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தது சிலர் படுகாயமடைந்தனர். விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.