அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை, அதிமுக கூட்டணி இறுதியாகிவிட்டதாக கூற முடியாது, கூட்டணியில் இருக்கிறோம் என்று அமித்ஷா கூறினாரே தவிர, கூட்டணியை உறுதி செய்யவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

தேர்தலுக்கு 9 மாதம் உள்ள நிலையில் கூட்டணி குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. இது குறித்த இறுதி முடிவை பாஜக தேசிய தலைமை தான் எடுக்கும்.

அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் எதுவும் கிடையாது, தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம். அதனால் அதிமுக-பாஜக கூட்டணி இறுதி, உறுதி என இப்போது எதுவும் கூற முடியாது.

25 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்கு பாஜக-வை தயாராக்கி வருகிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.