சென்னை

மிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் 3 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை , திருவள்ளூர் , ராணிப்பேட்டை , வேலூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவாரூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் , தஞ்சாவூர், அரியலூர், கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.