மேலூர்,

க்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாவிட்டால் பொது வாழ்க்கையை விட்டு விலகுவோம் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.

மதுரை அருகே உள்ள மேலூர் நிகழ்ச்சி ஒன்று வந்திருந்த அமைச்சர் உதயகுமாரிடம் செய்தியாளர்கள் பஸ் கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர்,  பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும், ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள்  நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்றால், பொது வாழ்க்கையை விட்டு விலகுவோம் என்றும் அவர் கூறினார்.